பக்கம்:புத்த ஞாயிறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘36 புத்த ஞாயிறு

செல்வர் : சொல்கிறேன். ஆனல் எக்காரணத்தைக் கொண்டும் என்மேல் நீங்கள் இப்போது சிறிதும் கேர்பித்துக் கொள்ளக்கூடாது. - - பிட்சு : உங்கள் விருப்பத்தை நீங்கள் வெளியிடப் போகி

lர்கள்! அதில் கோபப்பட என்ன இருக்கிறது. செல்வர் : நீங்கள் உடனே இந்தப் பிட்சுக் கோலத்தை நீத்துத் துறவறத்தைக் கைவிட்டு விட்டு என் வேண்டு கோளை ஏற்று என் அருமை மகளைத் திருமணம் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே என் விருப்பம். இந்த வேண்டுகோளை நான் விடுப்பதற்குக் காரணம் என் மகளை ஏற்பதற்குப் பொருத்தமான சாமுத்ரிகா லட்சணங்களும், என்னுடைய பெருஞ்செல்வத்தை வீணுக்கிவிடாமல் கட்டிக் காப்பதற்குரிய அடக்கமும் உடையவர் நீர் ஒருவரே என்பதுதான். பிட்சு : (கடுமையான குரலில்) ஐயா! உங்களுக்கு மிகவும் புண்ணியமாய்ப் போகிறது. தயவு செய்து தேரை உடனே நிறுத்தச் செய்யுங்கள். நான் கீழே இறங்கிக் கொள்கிறேன். செல்வர் : (பரபரப்புற்ற குரலில்) ஏன்...? ஏன்...? என்ன நடந்தது? எதற்காக இப்போது நீங்கள் தேரிலிருந்து கீழே இறங்க வேண்டும்.? - பிட்சு : அங்கேயே இந்த விருப்பத்தை என்னிடம் கூறி யிருந்தீர்களானல் நான் உங்களோடு புறப்பட்டு வந்தே இருக்க மாட்டேன். உங்கள் விருப்பத்தை என்னைப்போல் ஒரு புத்த பிட்சு பூர்த்தி செய்ய முடி யாது. பூர்த்தி செய்யவும் கூடாது. செல்வர் : தேர்ப்பாகா தேரை ஒரு விநாடி நிறுத்து.

(தேர் நிற்கிறது) செல்வர் : இறங்குவதற்கு முன்னல் மீண்டும் ஒரு முறை - நன்முகச் சிந்தித்துக் கொள்ளுங்கள், என் விருப்பத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/38&oldid=597401" இலிருந்து மீள்விக்கப்பட்டது