114
பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்
சோ உயரம், அகலம், திண்மை இவற்றோடு பகைவர் நெருங்க அரியது சோ.
நான்கு வகை அரண்களுள் சோவரணே சிறந்தது 83
- உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
- அமைவரண் என்றுரைக்கு நூல் 84
திருக்குறளில் 'அரண்' என்றே பொருட்பாலில் ஓர் அதிகாரம் உள்ளது. இஞ்சுதல் என்றால் தமிழில் இறுகுதல் என்று பொருள். இறுகிய மதிலே இஞ்சி - செம்பை உருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டிய மதிலே இஞ்சி.
- செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர் 85
- செம்பு புனைந் தியற்றிய சேண்நெடும் புரிசை
- உவரா வீகைத் துவரை யாண்டு 86
- சோ வரணும் போர் மடியத் தொல்லிலங்கை
- கட்டழித்த87
- சுழலழலுள் வைகின்று சோ88
- ஏமாண்ட நெடும்புரிசை89
- பிறைதொடும் பேமதில் 90
- சுடுமண் நெடுமதில் 91
- மழைதுஞ்சு நீளரணம்92
எனப் பழைய நூல்களில் பலவாகப் பயின்று வந்துள்ளமை காணத்தக்கது. இலங்கையிலும், துவார சமுத்திரம் எனப்படும் துவரை நகரிலும் 'இஞ்சியரண்’ இருந்தமை அறியப்படும். செப்புக்கோட்டை என்பது இராவணன் கோட்டைப் பெயராக இன்றும் ஈழத்தில் வழங்கப்படுகிறது. மதிலரணை அருமைப்படுத்துவது பொறியாதலால் ஏவறைகளும், பொறிகளுமுடைய இஞ்சியே சோவரணமாயிருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது. பெரும்பாலும் கோ நகரங்களில் ஒரே ஒரு சுற்றுமதில் தவிர ஒன்றினையடுத்து மற்றொன்றாகப் பல மதில்களைக் கட்டுவதும் உண்டு என்பது தெரிகிறது.