பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

189


பாலுந் தேனும் பெருகி ஓடுது
பரந்த சீமையிலே நாம்
பொறந்த சீமையிலே! ஆனா
பாடு படுறவன் வயிறு காயுது
பாதி நாளையிலே-வருஷத்தில்
பாதி நாளையிலே!
ஒ....என்னடா தம்பி நேராப்போடா
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா
தம்பிப் பயலே-இது
மாறுவதெப்போ? தீருவதெப்போ?
நம்ம கவலே!
வானம் பொழியுது! பூமி விளையுது!
தம்பிப் பயலே-நாம்
வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே-ஆனா
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே-இது
தகாதுயின்னு எடுத்துச் சொல்லியும் புரியலே-அதாலே

(மனுஷனை)

தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு-தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு-அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே-எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது நாட்டுலே-அதாலே

(மனுஷனை)