இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
189
- பாலுந் தேனும் பெருகி ஓடுது
- பரந்த சீமையிலே நாம்
- பொறந்த சீமையிலே! ஆனா
- பாடு படுறவன் வயிறு காயுது
- பாதி நாளையிலே-வருஷத்தில்
- பாதி நாளையிலே!
- ஒ....என்னடா தம்பி நேராப்போடா
- மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா
- தம்பிப் பயலே-இது
- மாறுவதெப்போ? தீருவதெப்போ?
- நம்ம கவலே!
- வானம் பொழியுது! பூமி விளையுது!
- தம்பிப் பயலே-நாம்
- வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே-ஆனா
- தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே-இது
- தகாதுயின்னு எடுத்துச் சொல்லியும் புரியலே-அதாலே
(மனுஷனை)
- தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு-தன்
- குறையை மறந்து மேலே பாக்குது பதரு-அதுபோல்
- அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே-எதுக்கும்
- ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது நாட்டுலே-அதாலே
(மனுஷனை)