இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
284
- சத்தியமே லட்சியமாய் கொள்ளடா.
- தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!....(சத்)
- (பாட்டு)
- சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
- தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!.....
- எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே-உன்னை
- இடற வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே!
- அத்தனையும் தாண்டிக் காலை முன் வையடா!-நீ
- அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! (சத்)
- குள்ளநரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்!
- நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும்!
- எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா-அவற்றை
- எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா!...(சத்)
நீலமலைத் திருடன்-1957
K. V. மகாதேவன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்