இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
226
- சமாதானமே தேவை ...
- அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை
- அமைதியாக நாம் வாழ்ந்திடவே
- அன்பும் அறமும் வளர்ந்திடவே
- சமரசப் பாதை தோன்றிடவே
- சாந்தியும் இன்பமும் சூழ்ந்திடவே
- (சமாதான)
- சாந்தியும் இன்பமும் சூழ்ந்திடவே
- போட்டிப் பொறாமைகள் இல்லாத-ஒரு
- புதிய சமுதாயம் உருவாக-புத்தர்
- காட்டிய வழியில் நாம் போக-அவர்
- கண்ட கனவுகள் நனவாக
- (சமாதான)
- கண்ட கனவுகள் நனவாக
- கட்சி பேதங்கள் எதற்காக?-பல
- கலகமும் பகையும் எதற்காக?
- ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம்!
- ஒரே கட்சியாய் இருந்திடுவோம்!
- (சமாதான)
- ஒரே கட்சியாய் இருந்திடுவோம்!
மருத நாட்டு வீரன்-1961
- இசை : S. V. வெங்கட்ராமன்
- பாடியவர்: T. M. செளந்தரராஜன்