16
ராசீ
“எப்படி எழுதினாலும் அவர்கள் மார்க்குப் போட்டு விடுகிறார்கள்”.
“காரணம் ?”
“என் கைழுயெழுத்து அழகாக இருக்கும்”
“நல்லது தான்”
“என் தலையெழுத்துச் சரியாக இல்லையே” என்று பதில் கூறுகிறாள்.
“அன்று எழுதி வைத்தவன் அப்படி; அதை அழிப்பது நம்மால் முடிவது எப்படி? எதுவும் நடக்கும் அதன்படி”.
“என்ன சார் வேதாந்தம் பேசுகிறீர்கள்?” என்றாள்.
“என் சித்தாந்தம் எடுபடாது என்பதை உணர்கிறேன்”
“அது பழைய காலம். வாய்ப்பு தான் தேவை; அதற்குப் பிறகு எல்லாம் சரியாகப் போய்விடும்” என்றாள்.
வெளியே போகிறவரை எங்கே போகிறாய் என்று கேட்கக்கூடாது தெரிகிறது; கேட்காமலும் இருக்க முடியவில்லை. நிச்சயமாகப் பிறை போர்க்களத்துக்குப் போகவில்லை; பெரிய காரியம் எதுவும் இருக்காது.
அவள் கையில் பை ஒன்று வைத்திருந்தாள்;
“கடைக்கா?” என்று கேட்கிறேன்.
“இல்லை: ஷாப்பிங்கிக்கு” என்று சொல்லிச் சிரித்தாள்.
“பலமா இருக்குமா?”