பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 65 470. பல் கறுக்கத் துவர்ப்பிட்டு பற்களிற் கறை ஏற்படும்படி (பாக்கு வெற்றின்லயின்) சிவப்பு நிறம் ஏறச் செய்தும். சிரித்தும், கொஞ்சம் அதட்டியும். கண்கள் பின் சுழலுவது பேர்ல் விழித்தும், இவ்வாறு (சில) பாவனைகள் செய்து இளைஞர்களுடைய. கழுத்தை அழுந்தக் கட்டி, (செப்புத் தனம்படக் குத்திட்டு) சிமிழை ஒத்த காங்கை படும்படி இறுக அணைத்து, (அதனால்) மனம் ம்படி ஆக்கிக், கற்பு மனோதிட்ம் அழிபட மிகுதியாக எழுகின்ற க்ாம ஆசை. தோன்றி இன்பத்தைத் தர, பச்சைக் கற்பூரத்தைப் பொடிசெய்து தேய்த்து அழகுடன் அலங்கரித்த கட்டிலின் மேற் சேர்ந்து புணர்கின்ற பொது மாதர்களின் சேர்க்கையை (இணக்கத்தை) நீக்கிச் சிறிது (அடியேனை) ரகூகித்துக் காக்க (உனது) அழகிய திருவடியைப் பெற்றிருக்கும் பாக்கியத்தை) பெறுவேனோ! வலிமை வாய்ந்த மாமரத்தை அழிபடும்படிக் குத்தியும், பெருமிதத்துடன் கர்ச்சித்து.*சக்கரிக்கு ಘೀ புத்திரற்கு (பிர்மனுக்கு)ப் பொருந்தவிலங்கை மாட்டும்படிக் கோபித்தும், பொன்மலையைக் (கிரவுஞ்சத்தை)த் துாள் எழும்படிப் பாடியாக்கியும். (அதை நிந்தித்தும், புதிய ரத்தத்தில் சிரிப்புடன் அள்ைந்த (துழாவின) பல பேய்கள்) பறிக்கப் பச்சிறைச்சிக்கண் கறிக் குப்பை - பச்சை மாமிசங்களில் கடித்துத் தின்னுதற்குரிய குவியல்களைப் பறித்து, உண்ணக் (கிடைக்குமேர்) என்றிருந்த (சிரச் சிக்குப் பரப்பு). மிகுந்த சந்தேகமும் ஆத்திரமும் (அப் பேய்களுக்கு) (ஒய்க் கட்டற) வேகத்தில் அடியோடு நீங்க (அல்லது - பாய்க்கட்டற போய் அடியோடு நீங்க)ப்புக்கு - யுத்தகளத்திற் புகுந்து சண்டை செய்தவனே! பரணமாக வெட்சிமாலையை (அணிந்த) அழகிய புயங்களில் உக்ரமான சத்திவேற் படையைக் கொண்ட பெருமாளே கச்சி நகரில் அழகியப் பெருமாளே! (பொற்பதத்தைப் பெற்றிருக்கைக்குப் பெறுவேனோ)

  • சக்கரி-சக்கிரி - சக்கரத்தை உடையவன். சங்கரி - சக்கரி. எனத் திரிந்தது. சங்கரி - சங்கு அரி - சங்கேந்திய திருமால்.