பக்கம்:சிலம்பின் கதை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொலைக்களக் காதை

109



தான். “கள்வன் ஒருவன்; அரண்மனைச் சிலம்பைக் கவர்ந்தவன்; அவனை என் சிறுகுடிலகத்து நிறுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். “அவன் கன்னக்கோல் இன்றியும், கவைக்கோல் இன்றியும் துன்னிய மந்திரம் துணையாகக் கொண்டு மன்னிய காவலரை ஏய்த்துக் கவர்ந்தான்” என்று விளக்கினான்.

அரசன் ஆணை

அரசன் சிந்தித்துப் பார்க்கவில்லை. எல்லாம் விதிதான்; அவன் அறிவு மயங்கிவிட்டது. உடனே காவலர்களை அழைத்தான். தன் மனைவியின் சிலம்பு கள்வன் கையில் இருந்தால் அவனைக் கொன்று அச்சிலம்பினைக் கொண்டு வருக என்று கட்டளை இட்டான். ஆராயாது அவன் கட்டளை இட்டது ஏன்? சிலம்பு காட்டினால் அரசி சிந்தை மாறுவாள் என்று நினைத்தான். அது மட்டு மன்று; உடன் அமைச்சர்கள் இல்லை அறிவுரைகூற, தீர்ப்புக்கூற வேண்டிய இடம் அது அன்று; எல்லாம் கொல்லனுக்குச் சாதகமாக முடிந்தன.

காவல் ஆணை அதனைச் செயல் படுத்தக் கொலை யாட்களைக் கொல்லன் உடன் அழைத்துச் சென்றான். வினை அங்கு வலைவிரித்துக் காத்து இருந்தது. அதில் அவன் அகப்பட்டு இருந்தான். அவன் மதி அப்பொழுது செயல்படவில்லை. சிலம்பு காண வந்தவர்கள் இவர்கள் என்று கொல்லன் கோவலனுக்கு அவர்களைக் காட்டினான்; கோவலன் அதை நம்பிவிட்டான்.

வாதங்கன்

அந்தக் கொலையாளிகள் உடனே செயல்பட வில்லை. அவன் சலனமற்ற தோற்றத்தைக் கண்டு “இவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/110&oldid=936424" இலிருந்து மீள்விக்கப்பட்டது