556
பன்னிரு திருமுறை வரலாறு
இனி, நல்லிசை ஞான சம்பந்தரும் நாவினுக்கரச ரும் பாடிய நற்றமிழ் மாலேயாகிய திருப்பதிகங்களே இயலிசை நலம் தோன்ற நாடொறும் இறைவன் திரு முன் ஓதி மகிழும் பத்திமையாளர் நம்பியாரூர ராகிய சுந்தரமூர்த் தி சுவாமிகள் என்பது,
- நல்லிசை ஞானசம்பந்தனும் தாவினுக்கரையனும்
பாடிய நற்றமிழ் மாலே
சொல்லியவே சொல்லி யேத்து கப்பான (7-67-5) என வரும் அவரது வாய்மொழியால் நன்கு விளங்கும். சுந்தரர் அருளிய திருப்பதிகங்கள், அவர் திருவாயி லிருந்து வெளிவரும்பொழுதே இ ன் னி ைச யு ட ன் வெளிப்பட்ட பண்ணுர்ந்த பாடல்கள் என்பது
- நண்புடைய நன் சடையன் இசைஞானிசிறுவன்
நாவலர்கோன் ஆரூரன் நாவினயந்து ரைசெய் பண்பயிலும் பத்துமிவை பத்திசெய்து நித்தம்
பாடவல்லார் அல்லலொடு பாவமிலர்தாமே ?”
(7–6–11) * உளங் குளிர் தமிழ்மாலே ?? (7–29–10) * ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ்பத்தும் ?
(7–67–11) * மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவலாரூரன்
சந்தம் இசையொடும் வல்லார் ’’ (7–73–11) * ஏழிசை யின்றமிழால் இசைந்தேத்திய பத்தினையும்
ஆழிகடலரையா அஞ்சையப்பர்க் கறிவிப்பதே ’’
(7–100–10) என நம்பியாரூரர் வாய்மொழிகளாக வரும் திருக்கடைக் காப்புத் தொடர்களால் இனிது விளங்கும்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையிறைவரால் தடுத்தாட் கொள்ளப்பெற்று முதன் முதற் பாடிப் போற்றிய பித்தா பிறை சூடி என்னும் திருப்பதிக அமைப்பினே,