786 பன்னிரு திருமுறை வரலாறு
அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்
றைம்புலனும் அடக்கி ஞானப் புகலுடை யோர்தம் முள்ளப் புண்டரிகத்
துள்ளிருக்கும் புராணர் ’ | 1–132-6) எனவும்,
- சுடர்க்கமலப் போதகஞ் சேர் புண்ணியனர் ’
{1–66–2) எனவும் வரும்தொடர்களில்ஞானசம்பந்தப்பிள்ளே யார் எடுத்தாண்டுள்ளார். இவ்வாறே திருநாவுக்கரசரும்,
- நன்மலர்மேல் உறையாநின்ற அறநெறியை ’
[6-29–1] எனவும்,
நின்றபூமேல் எழுந்தருளியிருந்தானே ?
[6–84–1] எனவும்,
- எரியாயதாமரைமேல் இயங்கிஞரும் [6–16–7]
எனவும்,
அடித்தாமரை மலர்மேல் வைத்தார் (6–21–1} எனவும்,
- புண்டரிகப் புதுமலராதனத்தார் ? [6–53–8]
எனவும் வருந்தொடர்களில் எடுத்தாண்டுள்ளமை காண்க.
ஒரு பொருளே விரும்புதலும் வெறுத்தலும் இல்லாத வன் இறைவன் . எனவே அம்முதல்வனுக்கு வேண்டு தல் வேண்டாமையிலான் என்பதொரு பெயராயிற்று. வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவனகிய இறைவனது திருவடியைச் சேர்ந்த அடியார்க்கும் விருப்பு வெறுப்பு என்னும் குற்றங்கள் இல்லாதொழி தலால் அவை காரணமாக வரும் பிறவித்துன்பங்கள் எக்காலத்தும் உண்டாகா என்பார்,