நா.பா. 181
என்று குப்தா சிவவடிவேலுக்குச் சொல்லி வைத்திருந்தான். அதல்ை அந்தப் பக்கம் வராமலே வீட்டில் இருந்த சிவவடி வேலு மறுநாள் சாயங்காலம் ஆடிட்டரைத் தேடிக் கொண்டு பார்கவிக்கு வந்தார். கவலையாகக் காணப்பட்டார்.
'ஆடிட்டர் சார், ஒரு முக்கியமான விஷயம். உங்ககிட்ட கன்ஸ்ல்ட் பண்ணலாம்னு வந்தேன்."
என்ன சொல்லுங்க?"
"நீங்க ஃபாரின் டிரிப் ஃபாரின் டிரிப்னு வற்புறுத்திட்டி ருந்தீங்களே. அதுக்கு இப்போ நேரம் வந்திருக்கு. இப்போ இருக்கிற கஷ்டிநஷ்டம் பணமுடை எல்லாத்தையும் பார்க் கறப்போ தயக்கமாகவும் இருக்கு."
'கஷ்ட நஷ்டம் என்னிக்கும் இருக்கத்தான் இருக்கும். அலை ஓய்ந்து கடல்லே நீராடுறதுங்கிறது நடக்கிற காரியம் இல்லே. அலை பாட்டுக்கு இருக்கும். நாம குளிச்சுத்தான் ஆகணும்.’’
'இது பண விஷயம். இப்ப இருக்கிற நஷ்டத்திலே... கட்டுப்படியாகணுமே?”
"அதெல்லால் எங்கிட்ட விட்டுடுங்க, ஒரு டிராவல் ஏஜெண்ட் குரூப் குரூப்பா அவனே ஏற்பாடு பணிக் கூடவே அழைச்சிட்டுப் போறான். நம்ம தமிழாளுதான், பாஷைப் பிரச்சினை இல்லை.ஒட்டல் அகாமடேஷனும் அவனே பண்ணிடு வான். மாதவி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்’னு பேர். பிராமாத மாகவே பன்றார்' என்ருர் ஆடிட்டிர்.
1 O
சிவவடிவேலு. ஆச்சியும் தாணுமாகப் பயணம் புறப்படி
வேண்டும் என்று வந்தபோது ஆடிட்டிருக்கு உடனே அந்த
ஜோதிட கலாரத்தினம் கடுக்கையூர் கண்ணபிரானைச் சந்தித்து
&–12