பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி : 21 நிரூபிக்கப்பெற்றவர்களின் நெற்றியிலே சூடான இரும்பு கம்பியால் சூடு போடுகிறார்கள். ைமாண்டேகு சீin , பொய்யை எங்கே கண்டாலும் மிதித்து அணைத்துவி வேண்டும். என்னைச் சுற்றி எங்காவது பொய் நடமாடுவதாய்க சந்தேகம் ஏற்பட்டால், தொற்று நோய்களுக்குச் செய்வது போல காற்றிலே புகையூட்டி வைப்பேன். அ. கார்வைப் பாவத்திற்குப் பல கருவிகளுண்டு; ஆனால், அவை அனைத்திற்கும் பொருந்தக்கூடிய கைப்பிடி பொய்தான். அ ஆ வெ. ஹோம்ஸ் பொழுதுபோக்கு மனிதர்கள் எப்பொழுதும் வேலை செய்துகொண்டேயிருக்க முடியாது. அவர்களுக்கும் பொழுது போக்க வசதி வேண்டும். நல்ல பொழுதுபோக்குகள் கிடைக்காவிட்டால், அவர்கள் தீமை யானவைகளில் ஈடுபட நேர்ந்துவிடும். அ ஓ.டி.யூயி பொழுதுபோக்கு என்பது சோம்பியிருத்தலன்று. உடலின் எந்தப் பகுதி வேலையால் களைத்துப் போயுள்ளதோ, அதை வேறு வேலையில் திருப்பிக் களைப்பைத் தீர்ப்பதாகும். பொழுதுபோக்கும் விளையாட்டுகள் ஒழுக்கத்திற்கு உகந்தவை: மெல்லிய காற்று. நெருப்புக்கு உதவுவது போன்றவை அவை ஆனால், பலமான காற்று நெருப்பை அணைத்துவிடும். அ. தாமஸ் அரிவாளுக்குச் சாணை பிடிப்பது போன்றது மனத்திற்குப் பொழுதுபோக்கு அது இல்லாவிட்டால் மனம் ஊக்கம் குன்றி மழுங்கிப் போகும். அ பிஷப் வாய உ. அ. - 19