பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 அன்பு அலறுகிற -திடிரென்று அந்தக் கரங்கள் மறைகின்றன; அம்மி கிடுகிடுத்துப் பாதாளத்தை நோக்கி கழுவுகிறது; பாதத்துக்குரிய அந்தப் பெண்ணுரு தடுமாறி கின்று அலறுகிறது. கான் அலங்காரம் செய்யப்பட்டு கிற்கிறேன், கின்ற இடத்திலேயே கின்று கிமிர்ந்து பார்க்கிறேன்; 'அருந்ததி பார்த்தாயா?’-இது என்ன கேள்வி என்று. நான் யோசிக்கவில்ஜல, போர்த்தேன்’ என்று பதில் சொல்லி வைக்கிறேன். என் கணவரிடம்--ஏன், என் வாழ்க்கையிலேயே கான் கூறிய முதல் பொய் அதுதான்! அதோ-என்னவோ சுருண்டு, கெளிகிறதே அது என்ன? பாம்பா? இல்லை இல்லை; கயிறு!-துரக்குக் கயிறு- அல்ல, அல்ல; தாலி! ஆண்டான் ஒருவன் தன் அடிமைக்குக் காட்டும் பட்டா, அது!-அல்ல, அல்லவே அல்ல. ஆண் ஒரு வன் தன் இனமில்லாத, தன்னிலிருந்து வேறுமில் லாத ஓர் உயிருக்கு-பிரிவு காட்டிப் பிரிந்த இயற்கை: பரிவு காட்டிச் சேர்க்கும் கியதிக்குப் பணிந்து சூட்டும் அன்புச் சின்னம் அது; பண்புச் சின்னம் அது! பெண் என்பவள் மலர் என்றும், ஆண் என்பவன் வண்டென்றும் எண்ணித் திரியும் பெண் பித்தர் களுக்குப் புத்தி கற்பிக்கும்-பயந்து மரியாதையோடு ஒதுங்கிச் செல்லச் செய்யும் எச்சரிக்கை:அது! ஆம்; காமுகரிடமிருந்து பெண்ணைக் காக்கும் சாட்டை அது!