பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16

 நாட்டுப் பணத்தைக் கடனாகவும் இனாமாகவும் பெற்றுத் தொழில் வளர்த்திட முனைவதைத் தேசியத் தன்மானத்தைக் கெடுப்பது என்று கூறிடக் காணோம். தொழில் நுட்ப அறிவு பெற்றிட ஆங்கிலேயரின் துணை தேடும்போது இந்தப் பேச்சு எழக்காணோம். மொழிபற்றி மட்டும்தான் இப்பேச்சு பேசுகின்றனர். எனவே தான், அவர்கட்கு ஆங்கிலம் கூடாது என்னும் கருத்தில்லை, கூறமட்டுஞ் செய்கிறர்கள் என்று ரைத்தேன்.

ஆங்கிலம் கூடாது என்று கூறுவதுடன், இந்தியே இணைப்புக்கு ஏற்ற மொழி என்று அவர்கள் வலியுறுத்தும்போது, கூறுபவரின் உண்மை நினைப்பும் வடிவமும் நன்றாகத் தெரிகின்றன. இந்தப் போக்கு வெற்றி பெற விடமாட்டோம் என மாணவர்கள் உறுதியுடன் நிற்பதனை அறிந்திருக்கின்றேன். மொழிப் பற்றின் எடுத்துக்காட்டாகத் திகழும் மாணவர்கட்கு எனது பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே போது, மொழிப் பிரச்சனையிலே உள்ள சிக்கல்களை - புகுத்தப்பட்டுள்ன சிக்கக்களை , நீக்குவதற்கான முயற்சிகளை, மொழிப் பற்றிலே முழு நம்பிக்கை கொண்டுள்ள தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும், நம்பிக்கையுடன் என்று கேட்டுக் கொள்கிறேன்.

10

பல்கலைக் கழகத்தில் பயிலுங்காலே வாழ்க்கையின் நீண்ட நெடும் பயணத்திலே, இது பாசறைப் பருவம் என்னும் உணர்வுடன் இருந்திடுவதே முறையாகும்.

பட்டம் பெற்றிடும் நண்பர்களே உம்மிடம் நாடு நிரம்ப எதிர்பார்த்த வண்ணமிருப்பதனே அறிந்து அதற்கேற்ப உமது செயல் முறைகளே வகுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இம்மாமதுரையினின்றும் புறப்பட்ட படைகள் மாநிலம் மெச்சிடும் வெற்றிகளை முடிமன்னர் நாட்களிலே பெற்றணித்தன என்று வரலாறு கூறுகிறது.