பக்கம்:அவள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216 வா. ச. ராமாமிருதம்


பற்றி எனக்கு அக்கறையுமில்லை. அன்று, இன்று, இனி என நாம் நியமித்த ஏற்பாட்டில் நாம் உழம்பிக்கொண்டிருப்பது என்றும் உள்ள இன்றுதான் சென்று போனதை நொந்து, இனிக் காய்த்துத் தொங்கப் போவதை நம்பி, கைப்பிடியில் விரலிடுக்கில் வழியும் இன்றை ஏமாந்து போவதை என்றேனும் எண்ணுகையில் சிரிப்பு ஏன் வராது? அழுவதற்குப் பதில் சிரிப்பு. அன்றிலிருந்து பாய்ந்துகொண்டிருக்கும் ஐீவ நதியின் ஓசையே இதுதான்.

அன்று

நான் குளித்துவிட்டு இடுப்பில் ஈரமுண்டுடன் திடுதிடுமென மாடியேறுகையில், பால்கனியிலிருந்து மோதிய நெடியில் மூக்குத் தண்டு எனையறியாமலே சுணுங்கிற்று. 'மோப்ப மாஸ்டர்’ என்று ஏற்கனவே பட்டம் வாங்கியிருக்கிறேன். வேட்டை நாய் என்று அழைக்கவில்லை. மரியாதைக் குறைவு ஆயிற்றே!

ராஜு பால்கனியிலிருந்து வெளிப்பட்டான். அவன் முகம் லேசாய் வெளிறிட்டிருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றோம்.

மனிதனோ, மிருகமோ, எவ்வளவு நெருங்கிய உறவானாலும் சரி எப்பவும் நம்மில் ஒரு நம்பிக்கையற்ற தன்மை, ஒரு சதா விழிப்பு இயங்கிக்கொண்டேயிருக்கிறது. இந்த உஷார் ஜீவனின் இயல்புக்கே உரிய தற்காப்போ!

ராஜுவுக்குப் படிக்க உடல் வணங்கவில்லை. "நான் வேண்டாம்னா சொல்றேன்?" அவன் தாய் என்னிடம் கை விரிக்கிறாள். "அவன் தான் வேலைக்குப் போகணும்னு ஆசைப்படறான். நீதான் அப்பாவிடம் சொல்லேன்"னு என்னைப் பிடுங்கியெடுக்கிறான். அவன் இஷ்டப்படி ஒரு வேலையைத்தான் பண்ணி வெச்சுடுங்களேன்! வயசுப் பிள்ளை அப்பா மாதிரி தான் ரெண்டு காசு ஆத்துக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/260&oldid=1497313" இலிருந்து மீள்விக்கப்பட்டது