இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
128 சுலபா
கவிதாவையும் உரிய ஏற்பாடுகளுடன் இங்கே அனுப்பிலை.
கணக்குகளை ஒழுங்கு செய்து என் சொத்துக்களை இந்த
ஆசிரமத்துக்கு எழுதி வைக்கணும்-'
சுலபா ! இதென்னடி விபரீதம்...? அடி பாவீ!"
இதற்குப் பதில் சொல்லாமல் கோகிலாவைக் கும்பிட்டு விட்டு ஒற்றையடிப் பாதையில் ஒரு மெளன நிழலாய்த் திரும்பி நடந்தாள் சுலபா. χ
“தனது 28-வது பிறந்த நாளில் திரைவானிலிருந்து ஒரு புகழ்பெற்ற நட்சத்திரம் தனது எல்லாப் பிரகாசங்களுட. னும் அழகுடனும் ஆன்மீகத் தோட்டத்துக்குள் உதிர்ந்து விட்டது'- என்று தேடிவருகிற பத்திரிகைக்காரர்களுக்குத் தான் சொல்லவேண்டிய வாக்கியத்தை யோசித்தபடியே காரை நோக்கித் திரும்பி நடந்தாள் கோகிலா.
\,