படித்தவள்
31
சுருசுருப்பான மனிதர், இப்பொழுது இரண்டு கோடிக்குச் சொத்துக்காரர்.
அப்படிக் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்.
அவர் சொன்னார்: “பெண்ணுக்குப் படிப்பு இருக்கக் கூடாது. அதைவிட அழகு அதைத் தேடக் கூடாது.குடும்பத்துக்கு இவை தேவை இல்லை. அப்படித்தான் தேடினேன்; கிடைத்தது” என்றார்.
“நீங்கள் அதிஷ்டசாலி; படிக்காத பெண் கிடைப்பது அதிருஷ்டம்” என்று சொல்லி வைத்தேன்.
“எப்படி சார் சொல்றீங்க” அவர் கேட்ட கேள்வி.
“இன்றைக்குக் காலம் அப்படி ஆகிவிட்டது; தேடித் தேடிப் பார்த்தா கூட எங்கேயும் கிடைக்க மாட்டார்கள்” என்று தெரிவித்தேன்.
“தேடினால் கிடைக்கும் சார்; குடும்பத்துக்குப் படித்த பெண்ணே கூடாது” என்று வற்புறுத்திக் கூறினார்.
அவர் மனைவி அப்படியே வாய்த்தாள் என்றார்.“ அதை இந்த நண்பரிடம் அறிவித்தேன்.”
“இதை ஏன் சொல்றீங்க?” என்று என் நண்பர் கேட்டார்.
“இதிலே என்ன புதுமை இருக்கிறது?” என்று கேட்டார்.
“அவர் பின்னாலே பார்த்த போது ஒட்டு வீடு ஒன்று தேடிக் கொண்டார்; அதை அவரே ஒப்புக் கொண்டார்.