பக்கம்:நற்றிணை-2.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 நற்றிணை தெளவுரை நம்மை வரைவதற்கு வந்தனர். அவருடைய வாய்மைக்கு ஏற்றபடியாக, நம்மவர்களும் நம்மை மணம் செய்து கொடுப் பதற்கு இச்ைந்தனர் என்ருல், அவருடன் இசைவாகப் பேசுவார் களோ! நம் காதலரின் புதியவர் போல வருகின்ற வரவினையும், வதுவை. நாளிலே காணப்படும் நாணத்தால் ஒடுங்கிய நின் ஒடுக்கத்தையும் பார்க்கும்போது, யானும் மகிழ்வேனே என்ப்தாம். - கருத்து : இனி மணம்பெற்று மகிழ்வாயாக' என்றதாம். சொற்பொருள் : நிவந்த உயர்ந்து வளர்ந்துள்ள. நிழல்படுநிழல்பட்டுக் கிடக்கும்; இருண்டடர்ந்த மரங்களையுடைய. கடுஞ்சூல் - தலைச்சூல். வயப்பிடி - இளைய பிடி, வலிய பிடியும் ஆம். உயங்க - வாடியிருப்ப. பசும்புனிறு பசிய வாலாமை; ஈன்றதன் மிக அண்மை நாட்கள். களி-மகிழ்ச்சி. வாலா-கரிய, வெண்மையற்ற, ஞெகிழி - எரிகொள்ளி. நிலைகிளர் மீன் - விண்iழ் கொள்ளி; நிலைகிளர் மின் என்று பாடம் கொண்டால் வானத்திருந்து இறங்கிப் பாயும் மின்னல் என்று கொள்க. வாய்மை - சொன்னசொற் பிழையாமை. நேர்வர்கொல் . இசைவார்களோ, வதுவை நாண் ஒடுக்கம் - வதுவை நாளில் மணப்பெண் தலைகவிழ்ந்து இருக்கும் வெட்கம் கவிந்த நிலை: வதுவை நாள் ஒடுக்கம், வதுவை நாண் ஒடுக்கம் என இரு வகையும் பொருள் கொண்டு மகிழலாம். - உள்ளுறை : கன்றீன்ற பிடியின் பசியைப் போக்குவதற்குக் கருதித் தினைகவரவந்த யானையின்மீது கானவன் எறிந்த எரிகொள்ளி விண்iழ் கொள்ளிபோலத் தோன்றும் என்றனள். இது நீ படும் பிரிவுத்துயரைத் தீர்க்கக் கருதித் தலைவனிடம் யான் இயற்பழித்துரைக்கக் கேட்டதும், அவன்முன் நின்னை வரைதற்கு வந்து நின் மனைமுற்றத்திலே குவித்துள்ள செல்வங் கள் சுட்ரொளி வீசாநின்றன என்றதாம். விளக்கம் : கானவன் வீசும் எரிகொள்ளிக்கும் அஞ்சாதே தன் கன்றின்ற பிடியின் பசிகளையத் தினைக்கதிரைச் சென்று கொணரும் களிற்றைப் போன்று, தலைவனும். தலைவியின் துயர் களைதற் பொருட்டாக எந்த இன்னற்கும் அஞ்சாத கழிபெருங் காதலன்பு கொண்டவன் என்பதாம். தலைவியின் களவுறவையறிந்த தோழி சொல்லும், புதுவர் ஆகிய வரவும்: நின் வரைவு நாண் ஒடுக்கமும் காணும் காலே' என்பது மிகவும் இன்பந்தரும் கற்பனைச் சுவையும் நகைச்சுவையும் மிகுந்த பேச்சாகும், - - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/404&oldid=774584" இலிருந்து மீள்விக்கப்பட்டது