பக்கம்:வீர காவியம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

போர்ப் படலம்


தேர்ந்தபெருங் களங்களெலாம் வென்று வந்த திறலெங்கே? கொண்டு வந்த தோள்கள் எங்கே? சேர்ந்தஉன தருஞ்செயல்கள் வலிமை எல்லாம் செப்பியநல் வாயெங்கே? சிறுவன் என்பால் நேர்ந்திளகிக் கசிந்துருகும் நெஞ்ச மெங்கே நிலையாக நிலைத்தனவே அனைத்தும் ஒன்ருய்! ஒர்ந்துனது நிலைமை எனக் குரைத்தல் நன்ரும் உரைநடையால் உயர்விர!” என்ருன் செல்வன். 414 கோளரியன் பொடிவைத்து மொழிந்த வெல்லாம் கூர் விழியன் கேட்டிருந்து, வீரச் செல்வ! நாளையினிப் பொரவருவோம்; மாலை வேளை நண்ணியதால் சமர்நிறுத்திப் பிரிந்து செல்வோம்; ஏளன மேன்? மறுநாளே முடிவு காண்போம்' என்றுரைத்தான் மாவேழன்; இன்று சென்று гны III ளொடு நீ வா.நாளை' என மொ ழிந்தான் வாய்மைமிகு போர்முறைகள் தேர்ந்த செம்மல். 415 - .ா - பச் சால் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/212&oldid=911399" இலிருந்து மீள்விக்கப்பட்டது