இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாவரங்கள்
37
படும். மலர்கள் இலை மட்டத்திற்குச் சற்று உயர வளர்ந்து பூக்கும் இயல்பின. இவற்றுள் குவளைப்பூ இவ்வாறு மலர்தலை ஒரு நற்றிணைப் பாடல் கூறும்
“கடவுட் கற்சுனை அடையிறந் தவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு”-நற். 1-2
இங்ஙனம் குவளை மலர் அடையிறந்தெழுந்து மலர்வதைக் கண்டறிந்து எழுதிய புலவர் திறம் போற்றற்குரியது.
குவளை—செங்கழுநீர் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுப்பு | : | பைகார்ப்பெல்லேட்டே |
தாவரக் குடும்பம் | : | நிம்பேயசி (Nymphaeaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | நிம்பேயா (Nymphaea) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஸ்டெல்லேட்டா (stellata) எனப்பட்டது. இப்போது இதனை நௌசாலியா (nouchalia Burm.f.) என்று தாவரவியலார் குறிப்பிடுகின்றனர். |
தாவர இயல்பு | : | பல பருவ நீர்த்தாவரம்,நீர்வாழ்செடி. |
தாவர வளரியல்பு | : | குளம் குட்டைகளில் நன்னீரிலும், அருவி ஓடைகளிலும் பல்லாண்டு வாழும் நீர்ச்செடி. |
வேர்த் தொகுதி | : | சேற்றில் அடிமட்டத்தண்டு (கிழங்கு) நீண்டு வளரும். அதிலிருந்து சிறு வேர்கள் உண்டாகும். இதன் மேற்புறத்தில் தோன்றும் இலைக் காம்பின் நுனியில் இலை உண்டாகும். |
அடி மட்டத் தண்டு | : | இக்கிழங்கிலிருந்து இலைக்கோணத்தின் தனிமலர் உண்டாகும். இலையும், அரும்பும், மலரும் நீர்மட்டத்திற்கு மேல் வளர்ந்து நீரில் மிதந்து காணப்படும். |