பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

37

படும். மலர்கள் இலை மட்டத்திற்குச் சற்று உயர வளர்ந்து பூக்கும் இயல்பின. இவற்றுள் குவளைப்பூ இவ்வாறு மலர்தலை ஒரு நற்றிணைப் பாடல் கூறும்

“கடவுட் கற்சுனை அடையிறந் தவிழ்ந்த
 பறியாக் குவளை மலரொடு”
-நற். 1-2

இங்ஙனம் குவளை மலர் அடையிறந்தெழுந்து மலர்வதைக் கண்டறிந்து எழுதிய புலவர் திறம் போற்றற்குரியது.


குவளை—செங்கழுநீர் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : நிம்பேயசி (Nymphaeaceae)
தாவரப் பேரினப் பெயர் : நிம்பேயா (Nymphaea)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்டெல்லேட்டா (stellata) எனப்பட்டது. இப்போது இதனை நௌசாலியா (nouchalia Burm.f.) என்று தாவரவியலார் குறிப்பிடுகின்றனர்.
தாவர இயல்பு : பல பருவ நீர்த்தாவரம்,நீர்வாழ்செடி.
தாவர வளரியல்பு : குளம் குட்டைகளில் நன்னீரிலும், அருவி ஓடைகளிலும் பல்லாண்டு வாழும் நீர்ச்செடி.
வேர்த் தொகுதி : சேற்றில் அடிமட்டத்தண்டு (கிழங்கு) நீண்டு வளரும். அதிலிருந்து சிறு வேர்கள் உண்டாகும். இதன் மேற்புறத்தில் தோன்றும் இலைக் காம்பின் நுனியில் இலை உண்டாகும்.
அடி மட்டத் தண்டு : இக்கிழங்கிலிருந்து இலைக்கோணத்தின் தனிமலர் உண்டாகும். இலையும், அரும்பும், மலரும் நீர்மட்டத்திற்கு மேல் வளர்ந்து நீரில் மிதந்து காணப்படும்.