இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
734
சங்க இலக்கியத்
இப்புல் பாலைச் சுரத்தில் வளரும்; வெள்ளிய கொத்தான பூக்களை அவிழ்க்கும்; முதுகில் வரிகளைக் கொண்ட அணிலின் வால் போன்ற வடிவாகத் தோன்றும்; பூ மலர்ந்து முதிர்ந்து கனியாகி, பழுத்த பின்னர் கழன்று (விதையாக) உதிர்ந்து விடும். இவ்வாறு கழன்று வீழ்ந்த, இதன் முதுபூ-போர்க்களத்தில் களிறோடு பட்டு வீழ்ந்த மன்னனுடைய கரிய குடுமியில் தங்கியதென்கிறார் ஒரு புலவர்.
“வேனல்வரி அணில் வாலத்து அன்ன
கான ஊகின் கழன்றுஉகு முதுவீ
அரியல் வான்குழல் சுரியல் தங்க”
-புறநா. 307 : 4-6
ஊகு—ஊகம் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | குளுமேசி (Glumaceae) |
தாவரக் குடும்பம் | : | கிராமினே (Gramineae) |
தாவரப் பேரினப் பெயர் | : | அரிஸ்டிடா (Aristida) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | செட்டேசியா (setacea) |
சங்க இலக்கியப் பெயர் | : | ஊகு |
உலக வழக்குப் பெயர் | : | ஊகம் புல்; துடைப்பம் புல் |
தாவர இயல்பு | : | ஒரு வகையான புல்; குத்துக் குத்தாக வளரும்; பல்லாண்டு வாழும்; ஆண்டுக்கொரு தரம் இதன் குச்சிகள்–கோல் ‘கல்ம்’ ஓங்கி, 4-48 அங். நீளம் வரை வளரும். மெல்லிய குச்சி வெண்மையானது. |
இலை | : | 20 அங். நீளமான, மெல்லிய, பசிய இலை. |
மஞ்சரி | : | கலப்பு மஞ்சரி; ‘ஸ்பைக்லெட்’ எனப்படும். பல மலர்கள் குச்சியின் நுனியில் கொத்தாக, அடர்ந்து பூக்கும்; வெண்மையானவை. |