பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தண்ணருள் நலத்தையும் கண்ணுற்ற கவிஞராகிய சாத்தனர் பாடல் ஒன்ருல் பாராட்டி வாழ்த்தினர். ' வழுதியர் பெருமானே! நீ மாலே அணிந்த மார்பினை உடையாய், முழந்தாள் அளவும் நீண்ட கரங் களே உடையாய்; புலவர்க்குப் புரவலன் , இரவலர்க்கு இனிய வள்ளல் ; நீ கடலிடத்தே கதிர் வீசி எழுகின்ற ஞாயிறு போன்று பகைவரைக் காய்ந்து அழிப்பவன் ; ஆனால், எம்போன்ற புலவர், பாணர், கூத்தர், விறலியர் முதலான பரிசிலர்க்குத் திங்களைப்போன்று தண்ணளி செய்பவன் ; நீ கீடு வாழ்க!” என்று பாண்டியனைச் சுருங்கிய சொற்களால் உளங்குளிரப் பாராட்டினர். தெடுஞ்செழியன் ஆட்சி - கன்மாறன் தன்னைச் சாத்தனர் புகழ்ந்து பாடிய சிறு பாடலால் அவரது பெரும்புலமையைத் தெரிந்து மகிழ்ந்தான். அவருக்குப் பரிசில் பல வழங்கிப்பாராட்டி ன்ை. அன்றுமுதல் சாத்தனர் அரசனே இடையிடையே கண்டு அளவளாவி மகிழ்வதுண்டு.சில ஆண்டுகளில் நன் அாறன் தனது சித்திரமாடத்தே உயிர்த்ேதான். அவ னுக்குப் பின்னர் அவன் வழிவந்த நெடுஞ்செழியன் என் உான் அரசுகட்டில் ஏறினன்.அவன் வடகாட்டில் படை யெடுத்து ஆரியப்படைகளைப் போரில் வென்று முறி படித்தவன். அதனுல் அவனேப் புலவர் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்' என்று போற்றுவா ராயினர். நெடுஞ்செழியன் போராற்றலுடன் புலமையாற்ற லும் பொருந்தியவன். அவன் சிறந்த கவிபாடும் செங் தமிழ்ப் புலமையுடையான். கல்வியின் பெருமையை கன்ருகக் கண்டவன். அதனுல் தன் காட்டில் கல்லா மையை ஒழிக்கப் பெரிதும் முயன்றவன். எக்குடிப்