4
இன்றையக் கல்யாணம் கோளாறான சடங்காகவே விளிர்கிறது.
நம் நாட்டில் கல்யாணம் எப்படி முடிவு செய்பப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்ததே. இன்று கல்யாணமும் பிஸினஸ் ரீதியில் தான் நடத்தப்படுகிறது.
இந்த வியாபாரத்திலே, பெண் மட்டமான சந்தைச்சரக்கு மாப்பிள்ளே கொஞ்சம் முறுக்கான சரக்கு. பணம் ஏராளமாக இருந்தால், பெண்ணை கிழவனுக்கும் நோயாளிக்கும், குருடு செவிடு ஊமைகளுக்கும் கூட தாலிகட்டிக் கொடுக்கத் தயங்குவதில்லை பெண்ணேப்பெற்றவர்கள். பண ஆசையில் குஷ்டரோதி, பைத்தியம் பிடித்தவன், ஆண்மை யற்ற அவிபோன்றவர்களுடன் தம் பெண்ணேக் கூட்டியனுப்பத் தயங்காத பெரியோர்களும் இருக்கிறார்கள்.
அதே மாதிரி, பணக்காரன் மகளை-அவளுக்கு சொத்து நிறையக் கிடைக்கும் எனும் காரணத்துக்காக-அவள் ஊமையோ, குருடோ, சீக்காளியோ, எப்படி விருப்பினும் சரி, கவலைப்படாமல் தங்கள் மகனுக்கு மணம் முடிக்குத் துணியும் பெற்றேர்களும் மலிந்து காணப்படுகிறார்கள் இன்றைய சமுதாயத்திலே.
இந்த வியாபாரத்துக்கு கண்துடைப்பாக உதவுகிறது ‘பொருத்தம் பார்க்கிற’ கேலிக்கூத்து. பொருத்தம் பார்க்கிறார்களாம் பொருத்தம்
ஜாதக ஓலை, நட்சத்திரங்கள், கிரகக் கட்டம், பெயர்கள் இவைகளை கவனித்து விட்டு, அவனுக்கும் அவளுக்கும் சரியான பொருத்தம் என்று முடிவுகட்டி விடுவது முட்டாள்தனம் அல்லாமல் வேறென்ன ?