இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
608
சங்க இலக்கியத்
“. . . . . . . . . . . . . . . . சேரலர்
. . . . . . . . . . . . . . . .
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்”
-அகநா. 149 : 7-10
“காலின் வந்த கருங்கறி மூடையும்”-பட்டின. 186
மிளகு—மிரியல்—கறி
தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் (அல்லியும் புல்லியும் இணைந்தவை) |
தாவரத் தொகுதி | : | மானோகிளைமிடியே (Monochlamydeae) மைக்ரெம்பிரையே (Micrembryeae) |
தாவரக் குடும்பம் | : | பைப்பெரேசி (Piperaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | பைப்பர் (Piper) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | நைகிரம் (nigrum) |
சங்க இலக்கியப் பெயர் | : | மிளகு |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் | : | கறி, மிரியல் |
ஆங்கிலப் பெயர் | : | கரும் மிளகு (Black pepper) |
தாவர வளரியல்பு | : | புதர்க் கொடி. மரங்களில் ஏறிப் படர்ந்து பன்னாள் வாழும். கொடி கருநிறமானது. |
தண்டு | : | இது ஒரு வலிய கொடியாகும். இதன் தண்டில் இரண்டாம் வளர்ச்சியில் அளவுக்கு மீறிய ‘குழாய் முடிகள்’ உண்டாகும். (Anomalous secondary growth) |
இலை | : | தனியிலை. அகன்ற பசிய இலை முட்டை வடிவானது. பளபளப்பானது. தடித்தது. |