88
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
பின்னியிருப்பதையும் ஒட்டடை ஒட்டியிருப்பதையும் கண்டேன். இது நல்ல அதிர்ஷ்டமா? அல்லது அபசகுனமா?” என்று கேட்டிருந்தார்.
அதற்கு மார்க் ட்வைன் எழுதிய பதில்:
“நமது பத்திரிகையில் யார் யார் விளம்பரம் செய்கிறார்கள்; யார் யார் செய்யவில்லை என்பதை அந்தச் சிலந்தி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. யார் விளம்பரம் செய்யாத வியாபாரியோ அவருடைய கடைக்குப் போனால் கொஞ்சமும் கவலையின்றி தான் வாழலாம் என்பது சிலந்தியின் எண்ணம்”.
(96)
புத்திசாலி நடிகர்
ரோகர்ஸ் என்னும் நடிகர் நடிப்பதற்காக, கிராய் என்னும் கதாசிரியரைக் கதை எழுத ஏற்பாடு செய்திருந்தனர், படத் தயாரிப்பாளர்.
ஆசிரியர் கிராயிடம் வந்து "நான் நடிப்பதற்காக அருமையான கதை ஒன்றை நீங்கள் எழுதி வைத்திருக்கிறீர்களாமே; எங்கே அந்தக் கதை?” என்று கேட்டார் நடிகர் ரோகர்ஸ்.
சிறு துண்டுக் காகிதம் ஒன்றை அவர் முன் போட்டார் கதாசிரியர்.
நடிகர் அதைப் பார்த்துப் புன்முறுவலோடு, “சரி, நான் இதில் நடிக்கத் தயார்!” என்றார்.