பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 5 பட்டிதொட்டிகளிளெல்லாம் திரையிடப்பட்டது. இதில் நடிகர் திலகம் மற்றும் புகழ்பெற்ற நடிகர்கள் அனை வரும் நடித்தனர். 1963 : "கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படத்திற்கு வசனம் - எழுதி புகழ் பெற்றார். மா.பொ.சி. கதை இந்த படத்தை பி.ஆர். பந்துலு இயக்கிய இந்த படத்தில் நடிகர் திலகம் வஊசி வேடமேற்று புகழ் பெற்றார். 1964 வானமுதம் என்ற கவிதை தொகுப்பு புத்தகத்தை பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் கவிஞர் கண்ணதாசன் முன்னிலையில் வெளியிடு செய்தார். 1964 முதல் 1968 வரை தமிழ்நாடு சட்டசபையில் மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1965 சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் விருது வழங்கப்பட்டது. தற்போதைய கலை மாமணி விருது 1966 'காந்தியுகம் கவிதை தொகுப்பு வெளியீடு. 1968 முதல் 1976 வரை இயல் இசை நாடக மன்ற செயலாளராக பணியாற்றினார். - 1972 மகள் திருமணம் பெருந்தலைவர் காமராஜர் சீரிய தலைமையில் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் திருமணம் நடைப்பெற்றது. மணமகன் தமிழ் பேராசிரியர் கோ. கண்ணர் ஆவார். 1973 தேச விடுதலை 25-ஆம் ஆண்டு நிறைவை போற்றும் வகையில் பாரத பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் தாமிர பத்திர விருது வழங்கப்பட்டது. வீரசுதந்திரம்' நாடகம் நடத்தினார். (தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் வரலாறு 1974 : “கவியின் குரல்”, “சிரிப்பதிகாரம்’, ‘கவியின் கனவு’ 14வது பதிப்பு போன்ற நூல்களை வெளியிட்டார். 1975 சிறந்த கதை வசனகர்த்தாவுக்கான டெல்லி சங்கீத நாடக சங்கத்தின் ஜனாதிபதி விருது பெற்றார். Y