இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எஸ்.டி. சுந்தரம்:
105
- பிளந்து என் இதயத்திலே மின்னும் உன்னுருவை
- எடுத்துக் கொண்டு, உடலை உன் கையாலேயே
- எரித்துப் சாம்பலாகப் பொசுக்கிவிடு மேகலா,
- பொசுக்கிவிடு மேகலா!
மேக :சுவாமி
உதய :உம் ஏன் தாமதம்? உயிர்க்கொலை பாவம் என்று
- உன் வேதாந்தம் சொல்கிறதா? அப்படியானால்
- என் உயிரை அணு அணுவாகச் சித்ரவதை
- செய்கிறாயே? இந்தப் பாவத்தை எந்தக் கடவுள்
- மன்னிக்கப் போகிறான்?
அறவணர் :குழந்தைகளே! காவேரி நதியோடு போட்டி
- யிடுகின்றனவே உங்கள் கண்விழிகள்! அதென்ன
- கண்ணிர்? அறிந்தேன்? உங்கள் கண்ணிர் ஆசை
- யெனும் மாசகற்றும். ஆனந்த ஊற்றாக
- மாறட்டும் துன்பமெனும் அழுக்ககற்றி, தும்பை
- மலர்போல் உங்கள் உள்ளம் பொலியட்டும்!
- மாயக் கண்ணிர் தெளிந்ததும் பளிங்கு போல்
- தெளிவு பிறக்கும்! வேதனை தீரும் உண்மை
- விளங்கும் நாடாளும் மன்னன் மகன் நள்ளிரவில்
- இங்கு ஏன் வந்தது?
உதய :செத்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி! சிரித்துப் பேசுகின்றீர்கள்!
அறவ :நீயும் சிரிக்கலாம் மைந்தா உள்ளம் சிரித்தால் உதடும் சிரிக்கும் உலகமும் சிரிக்கும்!
உதய :இல்லை சுவாமி! குற்றமற்ற என்னை
- மேகலை அழவைத்து விட்டாள்!
அறவ :இல்லை. உன் மனமே உனக்கு எதிரியாகி
- விட்டது. மனோ வேகத்தில் குளிர் காய்ச்சலால்
- பேசுகிறாய்! மேகலை தெய்வமகள்! மகனே!
- காவலன் மைந்தன் நீ! எதிர்கால வேந்தன்!
- பாராளும் மன்னன் மகன் நீ! மாதவியின் மகள்