பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் கதவருகே இனிமையாகப் பாடிக்கொண்டு எங்கிருந்தோ ஒரு பறவை வருகிறது.


சற்று நேரத்தில் அது பறந்தோடி மறைந்துவிடும். ஆனால் அதன் இன்னிசை என் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்து என்றும் தேனூறிக் கொண்டிருக்கும்.



“கவிதையே, உன்னை நான்தானே எழுதினேன் ?” என்று கூறி எழுத்தாணி

பெருமை கொள்கிறது.

39