இரங்கூன் வருகை
21
எங்கள் வீட்டின் முன் பெருங்கூட்டம் நின்று கொண்டிருந்தது. எங்கள் வீட்டுக்கு வரும் படிக்கட்டு வாயிலின் முன் இரண்டு கழகத் தோழர்கள் நின்று கூட்டம் உள்ளே நுழைந்துவிடாதபடி கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
யார் எவர் என்று விசாரித்துக் குறிப்பிட்ட சிலரை மட்டும் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள்.
மிக ஒழுங்குபடுத்தி, ஒரு தடவைக்கு இரண்டு மூன்று பேரை மட்டும் அனுப்பினார்கள், அவர்கள் பெரியாரைப் பார்த்துப் பேசித் திரும்பிய பின் அடுத்து இரண்டு அல்லது மூன்று பேரை அனுப்பினார்கள்.
மற்ற கழகத் தோழர்கள் நடைபாதையில் நின்று கொண்டிருந்தார்கள்.
மேலே வந்தவர்கள் பெரியாருக்கு வணக்கம் சொன்னார்கள். புத்தசமய மாநாட்டில் கலந்து கொள்ள வந்த இந்தியத்தலைவர் என்ற முறையில் பெரியாரை வரவேற்க வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்கள். பெரியாரின் வாழ்த்துரையைப் பெற்றுக் கொண்டு திரும்பினார்கள்.
இரங்கூனில் இருந்த அத்தனை இந்தியச் சங்கத் தலைவர்களும், பெரியாரை வந்து சந்தித்து வணங்கி வாழ்த்துப் பெற்றுச் சென்றார்கள்.
அப்படி வந்தவர்களின் பட்டியல்
அகில பர்மா இந்தியன் காங்கிரஸ்
அகில பர்மா தமிழர் சங்கம்
அனைத்து பர்மா குஜராத்தி சங்கம்