இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34
இந்தக் காட்சியைக் கண்டதும் அந்தச் சிட்டுக் குருவிக்கு அழுகை அழுகையாக வந்தது.
இவ்வளவு நாளும் அது தனக்காக மட்டுமே அழுதது.
இப்போது அது தன் இனத்துக்காக அழுதது.
மாந்தோப்புக்குப் திரும்பி வந்து மற்ற சிட்டுக் குருவிகளிடம் இதைப்பற்றிச் சொல்லி வருந்தியது.
மற்ற குருவிகளும் வருத்தப்பட்டன.
ஆனால்,நம்மால் என்ன செய்ய முடியும்? என்று சொல்லி விட்டு அவை தத்தம் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டன.
ஆனால் அந்தச் சிட்டுக் குருவிக்கு இதே கவலையாக இருந்தது.
உரிமையோடு வாழப்பிறந்த குருவிகள் இப்படி அடிமைப்படுவது என்பது அதனால் பொறுக்க முடியாத துயரமாய் இருந்தது. இதே வருத்தத்தில் அது நாளுக்குநாள் உடல் மெலிந்து வந்தது. அதன் நண்பர்களான மற்ற-