இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3
தேவதையும்
சிட்டுக்குருவிகளும்
திருவல்லிக்கேணி பாரதி சாலையில் ஓர் அரச மரம் இருக்கிறது. அந்த அரச மரத்தின் அடியில் ஒரு பிள்ளையார் இருக்கிறது. அந்த அரச மரத்தின் கிளை ஒன்றில் இரண்டு சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன.
அந்த இரண்டு சிட்டுக் குருவிகளும் என்றும் இணைபிரியாமல் இருந்தன.
ஒன்று ஆண். இன்னொன்று பெண். இரண்டும் எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்லும். எது கிடைத்தாலும் ஒன்றாகத்தான் தின்னும். என்ன செய்தாலும் ஒன்றாகத்தான் செய்யும்.