இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
120
புது மெருகு
விடுவார். தம்முடைய சாமர்த்தியத்தை ஜமீந்தார் அறிந்து பாராட்டுவார்' என்றெல்லாம் அவர் கோட்டை கட்டலானார்.
புலவரோ இதற்கெல்லாம் அயர்ந்த பேர்வழி அல்ல; இந்த மந்திரியைப் போல ஆயிரம் பேரை வாயில் போட்டுக்கொள்ளும் மனிதர். சிறிதும் அஞ்சாமல் உடனே பதில் சொன்னார்.
"அதற்குத்தானே காவிக் கல்லைக் கூட வைத்திருக்கிறேன்? அதை உரைத்துத் தடவிவிடுகிறது!"
"பலே, பலே!" என்று ஜமீந்தார் ஆனந்தத்தால் துள்ளினார்.
சவடால் ராயர் வாயடங்கினார். புலவர் அந்தச் சந்தோஷ வேகத்திலேயே சம்மானம் பெற்றுக் கொண்டு போனார்.