இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
முந்நீர் விழா
கள்- இப்போது புதிய விழா ஒன்றைப் பெற்றார்கள். அதுதான் முந்நீர் விழா. அந்த விழாவைச் செய்வதற்குக் காரணமாக மாகீர்த்தி இருந்தமையல் அவனை, "முந்நீர் விழவின் நெடியோன்' என்று புலவர்கள் பாராட்டினார்கள். முந்நீர் விழாவுக்கு முன் பல நாடுகளை அடிப்படுத்தியமையால், "நிலந்தரு திருவிற் பாண்டியன்' என்றும் அவன் புகழைப் பாடினார்கள்.
பாண்டி நாட்டினர் அந்த ஆண்டு முதல் ஆண்டு தோறும் கடல் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாட லாயினர்.