பக்கம்:இறைவர் திருமகன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

ஒருமுறை இயேசுநாதர் மக்களுக்கு நன்னெறிகளை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு, நீதி நூல்கற்ற ஒருவன் முன்னால் வந்து நின்றான். இயேசுநாதரை ஒரே கேள்வியில் திணறடிக்க வேண்டும் என்ற முடிவுடன் அவன் முன்வந்திருந்தான்.

“தலைவரே, முடிவற்ற வாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான் அந்த நீதிநூல் அறிஞன்.

“வேதநெறி என்ன கூறுகிறது?" என்று கேட்டார் இயேசுநாதர்.

“இறைவனிடம் மனதார அன்பு செலுத்து; உன்னைப் போலவே அடுத்தவனையும் கருதி அன்பு கொள்! என்று கூறப்பட்டிருக்கிறது" என்றான்.

“சரியான பதில்தான். இவ்வாறே நீ நடந்துவா. முடிவற்ற வாழ்வை நீ பெறுவது உறுதி” என்று களங்கமற்ற இயேசு கூறினார்.

அந்த மனிதனோ, "தலைவரே, இன்னும் சற்று விளக்கம் வேண்டும். அடுத்தவன் என்றால் யார்?" என்று கேட்டான்.