18
குருகுலப் போராட்டம்
இதனால் புத்தறிவும், பொது நோக்கும் உலக யல் அறிவும் ஏற்பட்டன என்று கூறலாம்.
ஆங்கிலக் கல்வியினால் பல கேடுகளும் உண்டாயின.
ஆங்கிலம் படித்து அரசாங்க வேலை பெற்றவர்கள், தங்களை ஓர் உயர்ந்த சாதியாராக எண்ணிக் கொண்டார்கள். தங்களுக்குக் கிடைத்த சிறிய அதிகாரங்களை வைத்துக் கொண்டு, தங்கள் சொந்த நாட்டு மக்களுக்குப் பெரிய கொடுமைகளை இழைத்தார்கள்.
‘கருப்புத் துரைகள்’ என்ற பட்டத்தையும் பொதுமக்களிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டார்கள்.
தாங்கள் செய்வது அடிமை வேலை என்பதை மறந்து விட்டு, தாய் நாட்டு மக்களை அடிமைகளாக நடத்திக் கொடுமைப் படுத்தினார்கள்.
வெள்ளைக்காரன் காலத்தில் ஏற்பட்ட இந்த மூடத்தனமான கொடுமை, இன்றைக்கும் இந்திய நாட்டின் அதிகார வர்க்கத்தாரிடம் குடி கொண்டிருப்பது மிக வேதனையளிப்பதாய் உள்ளது.
நாடு விடுதலை பெற்று மூன்று தலை முறை காலம் கடந்தும் அதிகாரிகளிடம் இந்த மனப்பான்மை ஒழியவில்லை என்பதை, நாட்டுத் தலைவர்கள் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.