பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

மலைகளுக்கு இடையிலே ஆறு வளைந்து செல்வது பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தது. என்றாலும், மருதாசலத்தைத் தவிர மற்றவர் மனத்திலே பயங்கர உணர்ச்சிதான் அதிகமாக இருந்தது. அவர்களால் இயற்கை அழகை அந்த நிலையில் கண்டு களிக்க முடியவில்லை.

இப்படி சுமார் அரை மைல் தூரம் சென்றிருப்பார்கள். மருதாசலம் பரிசலை வலக்கைப் பக்கத்திலிருந்த மலையருகாகவே தள்ளி வந்தான். அங்கே ஓரிடத்தில் மலை செங்குத்தாக ஓங்கி நின்றது. அதன்கீழே ஆற்றின் கரையில் ஒரு பரிசலை மேட்டில் தள்ளி நிறுத்தக்கூடிய அளவுக்குத் தட்டையான பாறை ஒன்று இருந்தது. அதன் அருகிலே பரிசலை நிறுத்தி மருதாசலம் லாகவமாகப் பாறையின்மேல் குதித்தான். பிறகு, பரிசலைப் பாறையோடு சேர்ந்தாற்போல் நிற்குமாறு பிடித்துக்கொண்டு, “பாறை மேல் இறங்குங்கள்” என்று கூறினான்.

“இங்கே இறங்கி என்ன செய்வது? போவதற்கு வழியே இல்லையே!” என்று சுந்தரம் கேட்டான்.

“இதோ வழி கிடைக்கிறது பாருங்கள்” என்று உற்சாகமாகக் கூறிக்கொண்டே மருதாசலம் தன் வாயில் இரண்டு விரல்களை மடக்கி வைத்துக்கொண்டு வேகமாகச் சீழ்க்கையடித்தான். கண்ணகி கண்களை உருட்டி விழித்துக்கொண்டு நின்றாள். சுந்தரத்திற்கும் தங்கமணிக்கும் அது துணிகரச் செயலுக்கு அறிகுறியாக உற்சாகமளித்தது. ஜின்கா மருதாசலத்தைச் சந்தேகத்தோடு பார்த்துக்கொண்டு பாறையின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தது.

மருதாசலம் மூன்று சீழ்க்கையடித்தான். ஆனால், பதில் ஒன்றும் கிடைக்கவில்லை. “ஏன் அப்பா இன்னும் பதில் கொடுக்கவில்லை? அவரையும் அந்தக் குள்ளன் ஏதாவது...” என்று அவன் சொல்லி முடிக்கு முன்பே, “எதற்காகச் சீழ்க்கையடிக்கிறாய்? யாராவது வர வேண்டுமா?” என்று தங்கமணி கேட்டான்.

“அதோ, மேலே பாருங்கள். நூறடிக்கும் மேலே ஒரு நூலேணி சுருட்டி வைத்திருக்கிறதல்லவா? அதைக் கீழே