பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 57 கவிஞர் நாரா நாச்சியப்பன், புரையோடிய சமுதாயக் கோணல்களைப் போக்கும் இனிய கதைக் கவிதைகளை மேலும் படைக்கவேண்டும்; புதுக்கவிதைப் போர்வையால் புழுங்கிக் கிடங்கும் தமிழுக்கு மரபு மணம் கூட்டவேண்டும்; பண்பாட்டுப் பொருண்மைக் கூறுகளைச் செவிமணக்கப் பாட வேண்டும் என்ற வேண்டுகோளைத் தமிழுலகின் சார்பில் கவிஞருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கவிஞரின் "நாச்சியப்பன் பாடல்களை', தமிழ் நெஞ்சங்கள் பயன் கொள்ளவேண்டும் என அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். 10-6-1980 ந. வீ. செயராமன்