பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு அடிகளார்



1465. “இன்றைய அரசியலில் - வாழத் தெரியாதவர்களே பெரிதும் ஈடுபடுகின்றனர்.”

1466. “தேவைக்கு வாங்கியவர்கள், திருப்பித் தரும் பொழுது சங்கடப்படுவது அறமன்று.”

1467. “நாளை எண்ணி ஊதியம் கொடுக்கும் முறை உழைப்பைக் கெடுக்கும்.”

1468. “உழைப்பு, பொருளீட்டல் ஆகிய இரண்டிலும் மன நிறைவு கொள்ளுதல் கூடாது கொண்டால் தேக்கநிலை வரும்.”

1469. “ஆற்றல் இயற்கை; படைப்புப் பொருளன்று. ஆற்றலைப் பயன்படுத்துகிற முறையிலேயே மனிதன் வெற்றி பெறுகிறான்.”

1470. “உள்ளவர் பெறுவார் என்பது ஆன்றோர் நியதி. இன்று அதையும் அழுக்காறு கெடுக்கிறது.”

1471. “தன்னைவிட மற்றவர் குறைவாகவே பெறுதல் வேண்டும் என்ற எண்ணம் இன்று பலரைப் பிடித்தாட்டுகிறது.”

1472. “இன்று எங்கும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசிப் பெருந்துன்பத்தை விளைவிக்கின்றனர்.”

1473. “இன்றைய இந்தியாவை, வேந்தலைக்கும் கொல்குறும்பு வருத்துகிறது.”

1474. “அறிவு, ஆள்வினையில் விருப்பமில்லாதார் விழுமிய சிறப்புக்களைத் தேடி அலைகின்றனர்.”

1475. “சாவு, - இயற்கை: ஆனால் வாழாமல் வாழ்வதைவிடச் நாமாக சாவது மேல்.”

1476. “இந்த உலகம் வாழ்க்கையின் மேல் உள்ள ஆசையால் எந்தத் துன்பத்தையும் எளிதில் மறந்துவிடும்.”