இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
இனிக்கும் பதில்
அவள் : முற்றிக் கனிந்திட்ட கோவைப் பழம்போல முன்பே சிவந்த உதடுகளை,
வெற்றிலை போட்டின்னும் ரத்தப் படுத்துதல் விவேக மாகுமோ காதலரே?
அவன் : வண்டு குலவிடும் தாமரைப் பூபோன்ற வர்ண சிவப்பு முகத்தினிலே,
வண்ணக் கிளிப்பிள்ளை வாய்நிறப் பொட்டுநீ வைப்பது மட்டும் சரிதானா?
அவள் : மிதக்கும் நிலாமுகப் பெண்ணின் உதடுகள் மென்று தின்கின்ற கற்கண்டு என்றால்,
இதுவரை எந்தனை முத்தமிட்டும் அவை இன்னும் கரையா திருப்பது ஏன்?
அவன் : வெட்டிய மாம்பிஞ்சு போன்ற விழியினால் 'வாருங்கள்' என்று அழைப்ப வளே,
சுட்ட-கொழுக்கட்டை மேல்கலத் தண்ணீரைக் கொட்டினும் மாவு கரைந் திடுமா?
பல்லிமுட்டை போன்ற முல்லை அரும்பினைப் பின்னிய கூந்தலில் வைத்த வளே,
ஒல்லி இடைதன்னில் மின்னல் அடிக்குது ஒசை மட்டும் அங்கு இல்லாத தேன்?
21