இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் 63 -
சேல்நினைந்தே குஞ்சுகளைக் கூர்ந்து நோக்கும்
சிறந்தசெயல் தாய்மீனின் தியாகம் கொண்ட
சுற்றத்திற் குதவுவதே குடும்பதியாகம்:
விட்டெறிதல் போராடும் வீரர் தியாகம்; பால்நினைந்தே ஊட்டுவது தாயின் தியாகம்:
பாரியைப் போல் வழங்குவதே சிறந்த தியாகம்! -(13.4.1967-ல் சென்னைல்ானொலியில் தியாகம்’ என்ற தலைப்பில்பாடியது)
எண்ணம்
நடையாடும் உலகத்தில் உள்ளார்க் கெல்லாம்
நாமெழுதிக் காட்டுகின்ற பாட லுக்கோர்
உடையாக இருப்பது தான் வடிவம் பாட்டின்
உடலாக இருப்பதுதான் எண்ண மாகும்.
சாமிகள்
உழுது பயிரிடும் உழவர்க ளெல்லாம் வகுத்த வயலின் வரப்பு சாமிகள்! தொழுதுண்டு வாழும் தொழும்பர்க ளெல்லாம் கூம்பிய தாமரைச் சோம்பல் சாமிகள்!