பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 15



“அடடே, அப்படியா!” என்று கேட்டுவிட்டு ‘அம்மா பேச்சை மீறிச் சென்றிருந்தால், நம் உயிருக்கும் ஆபத்துத்தான்!’ என்று நினைத்துக் கொண்டே ஓட்டம் பிடித்தது குட்டி மான்.

எங்கே?

பணக்காரர் வீட்டைத் தேடியா? இல்லை, பாசமுள்ள அம்மாவைத் தேடித்தான்!