பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 ❖

திரும்பி வந்த மான் குட்டி



(படம்)

வெங்காயபுரம் ராஜாவுக்கு எப்போதுமே முன் கோபம் அதிகம். அதனாலே அவரை எல்லோருமே ‘முன் கோபி ராஜா’, ‘முன்கோபி ராஜா’ என்றே அழைப்பார்கள். அவருடைய உண்மையான பெயர் என்ன என்பது எவருக்குமே தெரியவில்லை. ஆகையால், நாமும் அவரை ‘முன் கோபி ராஜா’ என்றே அழைப்போமா? சரி.

முன்கோபம் மிக அதிகமாக இருந்தாலும், அவருக்கு மூளை மிகக் கொஞ்சமாகவே இருந்தது.