12
164. உரித்த முயல் ஊருக்குப் போகுது.
165. கொத்துக் கொத்து ஈச்சங்காய்;
கோடாலி ஈச்சங்காய்;
மதுரைக்குப் போனாலும்,
வாடாத ஈச்சங்காய்.
166. ஆத்தாள் தெருவிலே,
மகள் கொலுவிலே.
167. கண்ணாடிக் குண்டு காற்றிலே பறக்குது;
கையாலே தொட்டால் காணாமல் போகுது.
168. ஐந்து வீட்டுக்கு ஒரே முற்றம்.
169. கேட்டால் பேசமாட்டான் - இரண்டு
போட்டால் பேசுவான்.
170. அதிசயக் குளத்திலே அற்புதக் குருவி.
வாலினால் தண்ணீரை வற்றவற்றக் குடிக்குது.
171. அடிமலர்ந்து நுனி மலராத பூ
என்ன பூ?
172. ஏழுமலைக்கு அப்பாலே
எருமை மாடு கத்துது.
173. அஸ்திவாரம் இல்லாமல் அரண்மனை கட்டினேன்.
174. எங்கள் வீட்டு எருமைக்கு
வருஷத்துக்கு ஒரு மேய்ச்சல்.
175. மாமா வீட்டுத் தோட்டத்திலே
மதயானை படுத்திருக்கு.
176. ஒரு சாண் குதிரைக்கு
உடம்பெல்லாம் பல்.
177. உச்சாணிக் கிளையிலே
உரல் கட்டித் தொங்குது.
178. முதுகிலே மூட்டை சுமந்து,
மூன்று மணிக்கு முழம் போவான்.
179. மத்தாப்பு எரியுது பட்டாசு வெடிக்குது.