21
285. பாட்டுப்பாடி வருவான்;
பட்டென்று அடித்தால் சாவான்.
286. வெளியே வெள்ளிக் கட்டி:
உள்ளே தங்கக் கட்டி.
287. அக்காள் வீட்டில் விளக்கேற்றினால்,
தங்கை வீட்டில் தானே எரியும்.
288. இரவல் கிடைக்காது;
இரவில் கிடைக்கும்.
289. காலும் இல்லை; கையும் இல்லை.
காடும் மலையும் நெடுகச் செல்வான்.
290. உச்சியில் குடுமி உண்டு; மனிதனல்ல,
உடம்பெல்லாம் உரோமமுண்டு; குரங்குமல்ல.
உருண்டை விழி மூன்றுண்டு; சிவனுமல்ல.
291. செடியில் விளையாத பஞ்சு;
தறியில் நூற்காத நூல்;
கையில் தொடாத துணி.
292. ஒடிப் படர்வேன்; கொடியல்ல.
ஒளிமிக உண்டு; நிலவல்ல.
மனைகளை அலங்கரிப்பேன்; மலரும் அல்ல.
293. தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்,
தொட்டால் போதும்; ஒட்டிக் கொள்வான்.
294. குட்டி போடும்; ஆனால், எட்டப் பறக்கும்.
295. பிறக்கும்போது சுருண்டிருப்பாள்;
பிறந்த பின்னர் விரிந்திருப்பாள்.
296. நாலு மூலை நாடகசாலை;
நடுவிலிருக்கும் பாடகசாலை;
ஆடும் பெண்கள் பதினாறு.
ஆட்டி வைப்பவர் இரண்டுபேர்.
297. எலும்பில்லாத மனிதன்,
கிளையில்லாத மரத்தில் ஏறுகிறான்.