பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுநாள் இரவு கொட்டகையில், மக்கள் கிறையக் கூடினரே. நெருக்கம் அதிகம் ஆனதனல், கின்றே பார்த்தனர் பலபேர்கள். முன்னுள் வந்த கோமாளி முதலில் வங்தான் மேடையிலே. கண்டதும் அவனைச் சபையோர்கள் கைகள் தட்டி வாழ்த்தினரே, பன்றி போலே அன்றும்அவன் பார்த்தோர் முன்னுல் கத்திடவே, ஒன்ருய் அனைவரும் அவனுக்கே உற்சா கத்தினை ஊட்டினரே. அவனது வித்தை முடிந்ததுமே, ஆரம் பித்தான் முனியாண்டி. எவரும் அவனைப் போற்ருமல் ஏளனம் அதிகம் செய்தனரே. போர்வை ஒன்றை உடல்மீது போர்த்திய படியே முனியாண்டி, பார்வை யாளரின் முன்பாகப் பன்றி போலக் குனிந்தனனே. 23