பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நூலாசிரியர்

33

நிறைவு செய்யவும், அதன் நூல்வளம் பெருக்கவும், நூலியற்றுவோர் ஒரு சிலரே!அவ்வொரு சிலருள், பிள்ளையவர்களும் ஒருவராவர்”

என்று உரைவேந்தரின் நூலாக்கப் பணியைப் போற்றுகின்றார், அவரின் மாணவர் ம.வி. இராகவன்.

நூற் பட்டியல்

பி.வி. கிரி என்பார் தாம் தொகுத்த 'உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு' என்னும் சிறுவெளியீட்டில், உரைவேந்தர் எழுதிய நூல்களைப் பின்வருமாறு பட்டியலிட்டுக் காட்டுகின்றார்:

1. திருமாற் பேற்றுத் திருப்பதிகவுரை,

2. திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை,

3. ஐங்குறுநூறு உரை,

4. புறநானூறு உரை,

5. பதிற்றுப்பத்து உரை,

6. நற்றிணை உரை,

7. ஞானாமிர்தம் உரையும் விளக்கமும்,

8. சிவஞானபோத மூலமும் சிற்றுரையும் பதிப்பும்,

9. சிலப்பதிகாரச் சுருக்கம்,

10. மணிமேகலைச் சுருக்கம்,

11. சீவகசிந்தாமணிச் சுருக்கம்,

12. சூளாமணி,

13. சிலப்பதிகார ஆராய்ச்சி,

14. மணிமேகலை ஆராய்ச்சி,

15. சீவகசிந்தாமணி ஆராய்ச்சி,

16. யசோதர காவியம் மூலமும் உரையும்,

17. தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும்,