இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரண்டலாமா?
❖
விழித்துப் பார்த்தேன்
விரலை மெதுவாய்க்
கடித்தொரு பாச்சை
கால்வாங்கியது.
பதைத்துக் கேட்டேன்:
'பாவப் பூச்சியே!
கட்டை விரல் ஏன்
தட்டுப்படாமல்
போனதுன் கண்ணில்?
மெலிந்திருக்கின்ற
சுண்டு விரலைச்
சுரண்டலாமா?
சுரண்ட லாமா?
சுரண்ட லாமா?’’