பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7
கலை உறவு -
சிற்பம்

மீபத்தில் நான் ஒரு பெண்கள் கல்லூரியின் ஆண்டு விழாவிற்குப் போயிருந்தேன். அங்கே பல இசை நிகழ்ச்சிகள், நல்ல நடனம் நாட்டியத்துடன் நடைபெற்றன. பாரதமாதாவின் திருவோலக்கம் ஒரு நல்ல காட்சியாக இருந்தது. இந்திய தேசப் படம் பின்னணியாக விளங்க, அதன் முன் ஒரு பெண் ரத்னமயமான கிரீடம் அணிந்து; கையில் சூலம் ஏந்தி ஒரு பெரிய பீடத்தில் நின்றிருந்தாள். அவளுக்கு வலது பக்கத்திலே இரண்டு பெண்கள்; இடது பக்கத்திலே இரண்டு பெண்கள்; உடையைப் பார்த்து வலப்புறம் நின்றவர்கள் பஞ்சாபி, மராத்தி என்றும், இடப்புறம் நின்றவர்கள் வங்காளி, தமிழ்ப் பெண் என்றும் தெரிந்து கொள்ளலாம். திரை விலகியதும் பாட்டு ஆரம்பமாகியது.

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு

என்ற பாரதியார் பாடலின் பல்லவியை மட்டும்

79